states

img

ஜார்க்கண்ட் மருத்துவமனை குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனையின் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். 
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஹஜ்ரா நினைவு மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவர் விகாஸ் ஹஜ்ரா, அவரது மனைவியான மருத்துவர் பிரேமா ஹஜ்ரா, அவர்களின் வீட்டு வேலை செய்யும் தாரா, உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திலிருந்த 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையிலிருந்து 25 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.